உள்ளூர் செய்திகள்

ரயில்வே பாதுகாப்பு படை வீரர் தற்கொலை

Published On 2023-11-08 07:59 GMT   |   Update On 2023-11-08 07:59 GMT
  • திருச்சி ஜங்ஷனில் பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர் ரயிலில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டார்
  • காரணம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை

திருச்சி,

புதுக்கோட்டையை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 39). இவர் திருச்சி ஜங்ஷன் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.இதனால் அவர் குடும்பத்துடன் திருச்சி கே.கே. நகர் ஓலையூர் ஆரண்யா நகர் அப்துல் கலாம் தெரு பகுதியில் வசித்து வந்தார்.நேற்று இரவு பணிக்கு வந்திருந்த அவருக்கு 1-வது பிளாட்பாரம் ஒதுக்கப்பட்டிருந்தது.அங்கு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மஞ்சுநாத் திடீரென 2-வது பிளாட்பார்முக்கு சென்றார்.அப்போது கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில் ஜங்ஷன் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. பின்னர் அந்த ரெயில் பயணிகளை ஏற்றி இறக்கி கொண்டு மீண்டும் சென்னை நோக்கி புறப்பட்டது. அப்போது திடீரென்று மஞ்சுநாத் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தார்.அடுத்த அடுத்த நொடி அவரது உடல் மீது ரயில் சக்கரம் ஏறி இறங்கி தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ரெயில் பயணிகள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் ஓட்டம் பிடித்தனர்.உடனே அங்கு பாதுகாப்பு பணிகள் ஈடுபட்டிருந்த சக ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் சம்பவ இடம் விரைந்தனர். இதற்கிடையே தகவல் அறிந்த திருச்சி ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகனசுந்தரி மற்றும் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மஞ்சுநாத் தற்கொலைக்கு காரணம் உடனடியாக தெரியவில்லை. பணிச்சுமை காரணமாக அவர் தற்கொலை செய்தாரா? அல்லது குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்தாரா? என பல கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.தற்கொலை செய்த மஞ்சுநாத்துக்கு நாகலட்சுமி (39) என்ற மனைவியும் குழந்தைகளும் உள்ளனர். தற்கொலை செய்த மஞ்சுநாத்துக்கு நேற்று இரவு 10 மணிக்கு டூட்டி நிறைவடைவதாக இருந்தது. இந்த நிலையில் இரவு 9.45 மணி அளவில் அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார்.இந்த தற்கொலை சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News