உள்ளூர் செய்திகள்

மகள் இறந்த துக்கத்தில் தாய் விஷம் குடித்து தற்கொலை

Published On 2023-04-27 08:20 GMT   |   Update On 2023-04-27 08:20 GMT
  • மகள் பாம்பு கடித்து இறந்த துக்கம் தாங்காமல தாய் விஷம் குடித்தார்
  • தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் உயிரிழந்தார்

திருச்சி

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கீழ கண்ணுப்பட்டி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி காயத்ரி. இந்த தம்பதியருக்கு 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பிரீத்தி என்ற சிறுமி பாம்பு கடித்து பரிதாபமாக இறந்து விட்டார். மகளின் இழப்பை தாய் காயத்ரியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால் மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளான காயத்ரி பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து விட்டார்.பின்னர் அவரது கணவர் ராஜேந்திரன் அவரை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.இருந்தபோதிலும் அவர் சிகிச்சை பல அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகள் இறந்த துக்கத்தில் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News