உள்ளூர் செய்திகள்

திருமணமாகாத விரக்தியில் இளம்பெண் தற்கொலை

Published On 2023-10-27 14:39 IST   |   Update On 2023-10-27 14:39:00 IST
  • மாப்பிள்ளை தேடியும் திருமணம் கைகூடவில்லை.
  • வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி

திருச்சி உறையூர் வாணிப செட்டி தெருவை சேர்ந்தவர் மருதை வீரன். இவரது மகள் அபிநயா (வயது 23).திரும ணமாகாத இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது.

இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். மேலும் அவருக்கு உடல் பருமன் அதிகரித்துள்ளது. இதனால் மாப்பிள்ளை தேடியும் திருமணம் கைகூடவில்லை.

இந்த 2 காரணங்களாலும் விரக்தியடைந்த அபிநயா வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை மருதை வீரன் கொடுத்த புகாரின் பேரில் உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின் றனர்.

கார்பெண்டர் சாவு

திருச்சி கே.சாத்தனூர் திருமலை சமுத்திரம் முள்ளிப்பட்டி கீழத்தெருவை சேர்ந்தவர் ரங்கராஜ் (வயது 45). கார்பெண்டர். இவர் தனது வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது மின்சாரம் தாக்கி பரிதா பமாக இறந்தார்.

இது குறித்து அவரது மனைவி சித்ரா கொடுத்த புகாரியின் அடிப்படையில் கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News