உள்ளூர் செய்திகள்

அரசு கல்லூரியில் மாணவர்களுக்கு பயிற்சி முகாம்

Published On 2023-04-22 10:11 GMT   |   Update On 2023-04-22 10:11 GMT
  • ரெட் கிராஸ் வரலாறு, குறிக்கோள், தன்னார்வலர்களின் பங்கு குறித்து பேசினார்.
  • யூத் ரெட் கிராஸ் அமைப்பின் மாணவர்கள் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர்.

பூதலூர்:

திருக்காட்டுப்பள்ளி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் அமைப்பின் மாணவர்களுக்கு ஆற்றுப்படுத்துதல் பயிற்சி முகாம் கல்லூரி முதல்வர் ராஜாவரதராஜா தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் இந்தியன் ரெட் கிராஸ் அமைப்பின் தஞ்சை மாவட்ட கிளை மேலாண்மைக்குழு உறுப்பினர் ஜெயக்குமார் கலந்து கொண்டு ரெட் கிராஸ் வரலாறு, குறிக்கோள், தன்னார்வலர்களின் பங்கு குறித்து பேசினார்.

இதில் கல்லூரியின் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், நிதியாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பயிற்சியில் யூத் ரெட் கிராஸ் அமைப்பின் மாணவர்கள் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை கல்லூரியின் கணினி அறிவியல் துறை தலைவரும், யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலரும், மாவட்ட அமைப்பாளருமான பேராசிரியர் முருகானந்தம் செய்திருந்தார்.

Tags:    

Similar News