உள்ளூர் செய்திகள்

பயிற்சி முகாம் நடந்தது.

ஊராட்சி தலைவர்களுக்கு பயிற்சி முகாம்

Published On 2022-10-10 09:21 GMT   |   Update On 2022-10-10 09:21 GMT
  • சமூக தணிக்கை மேற்கொள்வதில் ஊராட்சிகளின் பொறுப்பு.
  • பிளாஸ்டிக் பொருள்களை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும், மீறுபவர்களுக்கு அபதாரம்.

பாபநாசம்:

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் சமூக தணிக்கை மேற்கொள்வதில் ஊராட்சிகளில் பொறுப்பு குறித்து அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் பயிற்சி முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவகுமார் தலைமை வகித்தார்.

முகாமில் கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தராஜ், சமூக தணிக்கை வட்டார வள அலுவலர் ரமணன், ஒன்றிய பொறியாளர் சரவணன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் செயல்பாடுகள் சமூக தணிக்கை மேற்கொள்வதில் ஊராட்சிகளின் பொறுப்பு கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட பயிற்சி வழங்கினர்.

மேலும் ஊராட்சிகளில் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள்களை முற்றிலு மாக தடை செய்து, மீறுபவர்களுக்கு அபதாரம் விதிப்பது குறித்தும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

முகாமில் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊரக வளர்ச்சி துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News