உள்ளூர் செய்திகள்

பட்டாபிராமில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி வாலிபர் பலி

Published On 2022-07-28 06:46 GMT   |   Update On 2022-07-28 06:46 GMT
  • கிறிஸ்டோபர் இரவு பணி முடிந்து ரெயில் மூலம் பட்டாபிராம் வந்தார்.
  • அரக்கோணத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த விரைவு ரெயில் கிறிஸ்டோபர் மீது மோதியது.

திருநின்றவூர்:

ஆவடி அடுத்து பட்டாபிராம், காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் (வயது28). இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் இரவு அவர் பணி முடிந்து ரெயில் மூலம் பட்டாபிராம் வந்தார். பின்னர் அவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

அப்போது அரக்கோணத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த விரைவு ரெயில் கிறிஸ்டோபர் மீது மோதியது. இதில் அவர் உடல் துண்டு துண்டாகி பரிதாபமாக பலியானார்.

தகவல் அறிந்ததும் ஆவடி ரெயில்வே போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கிறிஸ்டோபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முன்னதாக போலீசார் வரும் வரை தண்டவாளத்தில் கிடந்த கிறிஸ்டோபர் உடலை கடந்து அடுத்தடுத்து ரெயில்கள் சென்றது காண்போரை கண்கலங்க செய்தது.

இதுகுறித்து ஆவடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News