உள்ளூர் செய்திகள்
- வயலில் அறுந்து கிடந்த கம்பியை மிதித்ததால் விபரீதம்
- போலீசார் விசாரணை
வந்தவாசி:
வந்தவாசியை அடுத்த தண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் வீரமுத்து (வயது 45). இவரது மனைவி கற்பகம்.இவர்களுக்கு திருமணம் ஆகி 3 மகன்கள் உள்ளனர். இவர் வேலைக்கு செல்ல வதற்காக அந்தப் பகுதியில் விவசாய நிலத்தின் வழியாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது வீரமுத்து அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்ததாக கூறப்படுகிறது. இதில் மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பொன்னூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீரமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மின்சார கம்பி அறுந்து விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.