உள்ளூர் செய்திகள்
- குடிபோதையில் விபரீதம்
- போலீசார் விசாரணை
செய்யாறு:
வெம்பாக்கம் அடுத்த பிரம்மதேசம் கிராமத்தை சேர்ந்தவர் எல்லப்பன் (வயது 64), விவசாய கூலி வேலை செய்து வருகிறார்.
கடந்த 24-ந் தேதி இரவு 7 மணி அளவில் குடிபோதையில் வீட்டில் தூக்கு மாட்டிக்கொண்டு அலறி துடித்தார். அலறல் சத்தம் கேட்டு அவரது மகன் குமார் எல்லப்பனை மீட்டு உடனடியாக காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
பின்னர்மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்த எல்லப்பன் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் இறந்தார்.
இதுகுறித்து பிரம்மதேசம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.