உள்ளூர் செய்திகள்

கிணற்றில் தவறி விழுந்து பெண் பலி

Published On 2022-08-18 09:32 GMT   |   Update On 2022-08-18 09:32 GMT
  • மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது பரிதாபம்
  • போலீசார் விசாரணை

சேத்துப்பட்டு:

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அருகே உள்ள அரியபாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார் விவசாயி.இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 41).இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன், உள்ளனர்.

விஜயலட்சுமி அரியபாடி கிராமத்தில் உள்ள இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார்.அப்போது கிணற்றின் அருகே மாடு மேய்த்துக் கொண்டு இருந்தது.

அப்போது அதனை விரட்டுவதற்காக கிணற்றின் அருகே விஜயலட்சுமி சென்றார். எதிர்பாராத விதமாக கால் தவறி கிணற்றில் விழுந்தார். அவருக்கு நீச்சல் தெரியாததால் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த பெரணமல்லூர், போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் கிணற்றிலிருந்து இறந்த விஜயலட்சுமியின் உடலை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News