உள்ளூர் செய்திகள்

பைக் மோதி வாலிபர் சாவு

Published On 2022-10-11 13:57 IST   |   Update On 2022-10-11 13:57:00 IST
  • ஒருவர் படுகாயம்
  • போலீசார் விசாரணை

போளூர்:

போளூர் அருகே அத்திமூர் கிராமத்தைச் சேர்ந்த மணிவண்ணன் (வயது 32) போளூர் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிகின்றார்.

கடந்த 6-ம் தேதி காலை பணிக்கு சென்று மீண்டும் இரவு 9.30 அளவில் அத்திமூருக்கு பைக்கில் வந்தார். அப்போது அரசு ஆஸ்பத்திரி அருகே எதிரில் மன்சூராபாத்தை சேர்ந்த ராஜமாணிக்கம என்பவரின் மகன் விக்னேஷ் (வயது 17) மாம்பட்டிலிருந்து மன்சுராபாத்திற்கு பைக்கில் வந்தார்.

அப்போது 2 பைக்கும் எதிர்பாராதவிதமாக ேமாதியது. இதில் 2 பேரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.

அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இருவரையும் போளூர் அரசு ஆஸ்பத்திரி சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக மணிவண்ணன் சென்னை தனியார் ஆஸ்பத்திரி அனுமதிக்கப்பட்டிருந்தார். விக்னேஷ் வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். வேலூர் ஆஸ்பத்திரி சேர்த்த விக்னேஷ் பரிதாபமாக நேற்று உயிரிழந்தார்.

இதுகுறித்து மணிவண்ணன் மனைவி சங்கீதா போளூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தன் ஆகியோர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News