என் மலர்
நீங்கள் தேடியது "Dies after being hit by a bike"
- சாலையை கடக்க முயன்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியை அடுத்த சயனபுரம் கிராமம், பெரிய தெருவை சேர்ந்தவர் கிருபாகரன் (வயது 54) விவசாயி.
இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டிலிருந்து நெமிலி செல்வதற்காக சாலையை கடந்த போது எதிரே வந்த மோட் டார்சைக்கிள் அவர் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பலி
பின்னர் மேல் சிகிச்சைக் காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒருவர் படுகாயம்
- போலீசார் விசாரணை
போளூர்:
போளூர் அருகே அத்திமூர் கிராமத்தைச் சேர்ந்த மணிவண்ணன் (வயது 32) போளூர் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிகின்றார்.
கடந்த 6-ம் தேதி காலை பணிக்கு சென்று மீண்டும் இரவு 9.30 அளவில் அத்திமூருக்கு பைக்கில் வந்தார். அப்போது அரசு ஆஸ்பத்திரி அருகே எதிரில் மன்சூராபாத்தை சேர்ந்த ராஜமாணிக்கம என்பவரின் மகன் விக்னேஷ் (வயது 17) மாம்பட்டிலிருந்து மன்சுராபாத்திற்கு பைக்கில் வந்தார்.
அப்போது 2 பைக்கும் எதிர்பாராதவிதமாக ேமாதியது. இதில் 2 பேரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.
அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இருவரையும் போளூர் அரசு ஆஸ்பத்திரி சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக மணிவண்ணன் சென்னை தனியார் ஆஸ்பத்திரி அனுமதிக்கப்பட்டிருந்தார். விக்னேஷ் வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். வேலூர் ஆஸ்பத்திரி சேர்த்த விக்னேஷ் பரிதாபமாக நேற்று உயிரிழந்தார்.
இதுகுறித்து மணிவண்ணன் மனைவி சங்கீதா போளூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தன் ஆகியோர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சாலையை கடக்க முயன்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த சின்னசந்தவாசலை சேர்ந்தவர். சுப்பிரமணி (வயது 40) இவர் வேலூர் செல்லும் ரோட்டில் சந்தனக் கொட்டாய் பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் 10 ஆண்டுகளாக சமையல் மாஸ்டராக வேலை செய்து வந்தார். கடந்த 1-ந் தேதி சுப்பிரமணி சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியே கம்ம வான்பேட்டையிலிருந்து கணியம்பாடி நோக்கி சென்ற பைக் இவர் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி இறந்துவிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக சுப்பிரமணி மகன் ராஜ்குமார் வேலூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






