உள்ளூர் செய்திகள்

செல்வவிநாயகர், மாரியம்மன், கோவில் கும்பாபிஷேகம் நடந்த போது எடுத்த படம்.

செல்வ விநாயகர், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2022-08-16 14:28 IST   |   Update On 2022-08-16 14:58:00 IST
  • திரளான பக்தர்கள் தரிசனம்
  • அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது

சேத்துப்பட்டு:

திருவண்ணாமலை, மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ள இராமாபுரம், கிராமத்தில் செல்வ விநாயகர், மாரியம்மன் கோவில் புதிதாக புதுப்பிக்கப்பட்டு, பஞ்ச வர்ணம் பூசி. இதன் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.

கோவிலின் முன்பு யாகசாலை அமைத்து, சிவா ஷர்மா, அய்யர் குழுவினரால், 108 கலசம் வைத்து, விநாயகர் பூஜை, கோ பூஜை, தம்பதி பூஜை, நாடி சந்தனம், உள்ளிட்ட 3 கால யாக பூஜைகள் செய்யப்பட்டு, பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கலசத்தை வைத்து. மேளதாளம் முழங்க கோவிலை சுற்றி வந்து கோவில் விமான கோபுரத்தின் மீது உள்ள கலசத்தின் மீது புனித நீரை ஊற்றினார்கள். அங்கிருந்த பக்தர்கள் மீது புனித நீரை தெளித்தனர்.

அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், ஊர் பொதுமக்கள், இளைஞர்கள், செய்திருந்தனர்.

Tags:    

Similar News