உள்ளூர் செய்திகள்
திருவண்ணாமலையில் பரணி தீபம் தரிசன அனுமதி சீட்டு முறைகேடாக விற்பனையா?
- சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்
- விசாரணை நடத்த பக்தர்கள் வலியுறுத்தல்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகாதீ பத்திருவிழாவையொட்டி நேற்று அதிகாலை கோவிலில் பர ணிதீபம் ஏற்றப்பட்டது. அனுமதி சீட்டு பெற்றவர்கள் மட் டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஏராளமான பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல முற்பட்டனர்.
எனினும் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. பரணி தீப தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் வெளியே காத்திருந்தனர். எப்படியாவது உள்ளே சென்று விடலாம் என அவர்கள் முயன்ற வண்ணம் இருந்தனர்.
இந்த நிலையில் பரணி தீப் அனுமதி சீட்டு சிலரால் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை விற்கப்பட்டதாக கூறப்படு கிறது. அனுமதி சீட்டினை சிலர் முறைகேடாக விற்பனை செய் வது போன்ற வீடியோவும் சமூகவலைதளங்களில் வைரலானது.
இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.