உள்ளூர் செய்திகள்

அண்ணாமலை உச்சியில் தேசியக்கொடி

Published On 2022-08-14 09:09 GMT   |   Update On 2022-08-14 09:09 GMT
  • வீடுகளில் தேசிய கொடி ஏற்றம்
  • வீடுகளில் தேசிய கொடி ஏற்றம்

திருவண்ணாமலை:

75-வது சுதந்திர தினத்தையொட்டி வீடுகள் வணிக நிறுவனங்கள் கல்வி நிலையங்கள் மத்திய மாநில அரசு அலுவலகங்கள் தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து கட்டிடங்களிலும் 3 நாட்கள் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்த மத்திய அரசு அறிவித்தது.

அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வீடுகள் மத்திய மாநில அரசு கட்டிடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேசிய கொடி ஏற்றியுள்ளனர்.

வீடுகள் தோறும் தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளதால் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தெருக்கள் தேசிய கொடிகளாக காட்சியளிக்கின்றன.

திருவண்ணாமலையில் மலையே சிவனாக போற்றப்படும் அண்ணாமலை உச்சியின் மீது ஏறி சென்று சிலர் தேசிய கொடி போர்த்தி மரியாதை செலுத்தினர். தண்டராம்பட்டு அடுத்த தானிப்பாடி பஸ் நிலையத்தில் சுமார் 100 அடி நீளத்துக்கு தேசிய கொடி கட்டப்பட்டுள்ளது.

Tags:    

Similar News