உள்ளூர் செய்திகள்

ஒகற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2022-08-22 15:13 IST   |   Update On 2022-08-22 15:13:00 IST
  • வந்தவாசி வெங்கடாபுரத்தில் நடந்தது
  • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

வந்தவாசி:

வந்தவாசியை அடுத்த வெங்கடாபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீகற்பக விநாயகர் கோவில் மற்றும் ஸ்ரீசுப்பிரமணியர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை காலை நடந்தது.

இதையொட்டி சனிக்கிழமை கோயிலை ஒட்டி யாகசாலை அமைக்கப்பட்டு ஹோமங்கள், கணபதி பூஜை, அனுக்ஞை, வாஸ்துசாந்தி, கும்பலங்காரம், அஷ்டபந்தனம் சாற்றுதல் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது.

மகா கணபதி ஹோமம், மகா பூர்ணாஹூதி, கலசப் புறப்பாடு நடந்தது.

காலை 9 மணிக்கு மேல் 10-30 மணிக்குள் கோவில்களின் கோபுர கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.

பின்னர் மூலவர் சாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News