உள்ளூர் செய்திகள்
கண்ணமங்கலம் வெள்ளூர் பள்ளியில் முப்பெரும் விழா
- மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள வெள்ளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நேற்று ஆசிரியர் தினம், தெரசா மற்றும் வ.உ.சி பிறந்த நாள் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் தீபாகலைவாணன் தலைமை தாங்கினார்.
ஓய்வு தலைமை ஆசிரியர்கள் கிருஷ்ணமூர்த்தி, கார்த்திகேயனிடம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் தமிழரசி வரவேற்று பேசினார்.
மாணவ மாணவிகளுக்கு சிறார் நூலக புத்தகங்கள் வழங்கப்பட்டது. இதில் சந்தவாசல் கூட்டுறவு சங்க தலைவர் சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் பிரபு நன்றி கூறினார்.