உள்ளூர் செய்திகள்

கூட்டுறவு வங்கி சார்பில் நிதி சார் கல்வி விழிப்புணர்வு முகாம் நடந்த காட்சி.

கூட்டுறவு வங்கி சார்பில் நிதி சார் கல்வி விழிப்புணர்வு முகாம்

Published On 2022-08-25 16:03 IST   |   Update On 2022-08-25 16:03:00 IST
  • மாற்றுத்திறனாளிகள் மகளிர் சுயஉதவிகுழுவினர்கள் பங்கேற்பு
  • விண்ணப்பம் வழங்கப்பட்டது

வெம்பாக்கம்:

திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மாங்கால் கூட்டு ரோடு கிளை சார்பில் அழிஞ்சல் பட்டு கிராமத்தில் நிதிசார் கல்வி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

கிளை மேலாளர் பி ஜெயந்தி தலைமை தாங்கினார் ஊராட்சி மன்ற தலைவர் ஷகிலா மற்றும் வார்டு உறுப்பினர்கள் மாற்றுத்திறனாளிகள் மகளிர் சுய உதவி குழுவினர்கள் கலந்து கொண்டனர்.

முகாமில் வங்கிமூலம் வழங்கப்படும் சேவைகள் மாற்றுத்திறனாளி கடன்கள் கால்நடை பராமரிப்பு மூலதான கடன் கடன் நடமாடும் ஏடிஎம் நடமாடும் வாகனம் மூலம் கணக்குதுவக்குதல் ஆகிய குறித்து விளக்கப்பட்டது தொடர்ந்து கறவை மாட்டு கடன் மாற்றுத்திறனாளி கடன் சிறுகுறு தொழில் கடன் களின் விண்ணப்பம் வழங்கப்பட்டன.

இதில் வங்கி உதவியாளர் தீபா காசாளர் சபரிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News