உள்ளூர் செய்திகள்

போதை மருந்து தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்த காட்சி.

போதை மருந்து தடுப்பு விழிப்புணர்வு முகாம்

Published On 2022-08-09 14:15 IST   |   Update On 2022-08-09 14:15:00 IST
  • 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு
  • கலெக்டர் தலைமையில் நடந்தது

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை ஜீவா வேலு பன்னாட்டு பள்ளி மாணவ மாணவிகள் திருவண்ணாமலை கலெக்டர் தலைமையில் நடைபெற்ற போதை மருந்து தடுப்பு விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டு பேரணியாக சென்றனர். விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பள்ளியின் துணைத் தாளாளர் விஜிதா குமரன் முன்னிலை வகித்தார்.

பள்ளியின் பதிவாளர் முனைவர் இர. சத்தியசீலன் தலைமை தாங்கினார். ஜீவா வேலு பன்னாட்டு பள்ளியின் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

முனைவர் கார்த்திகேயன் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

Tags:    

Similar News