உள்ளூர் செய்திகள்

பைக் மோதி சமையல் மாஸ்டர் பலி

Published On 2022-07-03 14:34 IST   |   Update On 2022-07-03 14:34:00 IST
  • சாலையை கடக்க முயன்ற போது பரிதாபம்
  • போலீசார் விசாரணை

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அடுத்த சின்னசந்தவாசலை சேர்ந்தவர். சுப்பிரமணி (வயது 40) இவர் வேலூர் செல்லும் ரோட்டில் சந்தனக் கொட்டாய் பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் 10 ஆண்டுகளாக சமையல் மாஸ்டராக வேலை செய்து வந்தார். கடந்த 1-ந் தேதி சுப்பிரமணி சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியே கம்ம வான்பேட்டையிலிருந்து கணியம்பாடி நோக்கி சென்ற பைக் இவர் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி இறந்துவிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக சுப்பிரமணி மகன் ராஜ்குமார் வேலூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News