உள்ளூர் செய்திகள்

கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய கட்டிட தொழிலாளி

Published On 2022-08-31 15:06 IST   |   Update On 2022-08-31 15:06:00 IST
  • போக்சோ சட்டத்தில் கைது
  • போலீசார் விசாரணை

செய்யாறு:

வெம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வயது 17 மாணவி. இவர் செய்யாறு பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் படித்து வருகிறார்.

அதே பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரியான வாலிபர் ஒருவர் கல்லூரி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி அடிக்கடி உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மாணவி 5 மாதம் கர்ப்பமானார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் சோனியா வழக்கு பதிவு செய்து வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்.

Tags:    

Similar News