என் மலர்
நீங்கள் தேடியது "college student pregnant"
- போக்சோ சட்டத்தில் கைது
- போலீசார் விசாரணை
செய்யாறு:
வெம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வயது 17 மாணவி. இவர் செய்யாறு பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் படித்து வருகிறார்.
அதே பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரியான வாலிபர் ஒருவர் கல்லூரி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி அடிக்கடி உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மாணவி 5 மாதம் கர்ப்பமானார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் சோனியா வழக்கு பதிவு செய்து வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்.
- தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வருகிறேன். நான் கல்லூரி பஸ்சில் சென்று வந்தேன்.
- கடந்த 1 வருடங்களுக்கு முன்பு இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசியும், நேரில் சந்தித்தும் எங்களது காதலை வளர்த்து வந்தோம்.
கோவை:
கோவை சூலூரை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி. இவர் பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-
நான் தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வருகிறேன். நான் கல்லூரி பஸ்சில் சென்று வந்தேன். அப்போது தினசரி பஸ்சில் வரும் கும்பகோணத்தை சேர்ந்த கவுதம் (வயது 21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 1 வருடங்களுக்கு முன்பு இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசியும், நேரில் சந்தித்தும் எங்களது காதலை வளர்த்து வந்தோம்.
கவுதம் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் என்னை மோட்டார் சைக்கிளில் அடையாளம் தெரியாத இடத்துக்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். அதன் பின்னர் ஜனவரி 2022-ம் ஆண்டு எனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அங்கு வந்த கவுதம் மீண்டும் ஆசை வார்த்தை கூறி என்னிடம் ஜாலியாக இருந்தார்.
இதன்காரணமாக கடந்த மார்ச் மாதம் நான் கர்ப்பமானேன். இது குறித்து கவுதமிடம் தெரிவித்தேன். அவர் கர்ப்பமான விஷயத்தை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் என என்னை மிரட்டினார். அதன் பின்னர் என்னிடம் அவர் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்து வந்தார். அதன் பின்னர் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை.
இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி திடீரென எனக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. இதனையடுத்து எனது தாய் என்னை அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றார். அப்போது என்னை பரிசோதனை செய்த டாக்டர்கள் நான் 5 மாத கர்ப்பமாக இருப்பதாக எனது தாயிடம் தெரிவித்தனர்.
அவர் இதற்கு யார் காரணம் என என்னிடம் கேட்டார். நான் நடந்த சம்பவங்களை அவரிடம் தெரிவித்தேன். எனவே என்னிடம் திருமணம் செய்வதாக கூறி ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கி ஏமாற்றிய கவுதம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அளித்த புகாரில் கூறியிருந்தார்.
புகாரின் பேரில் பேரூர் அனைத்து மகளிர் போலீசார் இளம்பெண்ணை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய கவுதம் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.






