உள்ளூர் செய்திகள்
வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
- புதிதாக கட்டப்படும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பார்வையிட்டார்
- அதிகாரிகள் உடன் இருந்தனர்
போளூர்:
திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் போளூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதியில் நடைபெற்று வந்த வளர்ச்சி திட்ட பணிகளை நேற்று பார்வையிட்டார்.
போளூர் அருகே உள்ள ஏந்துவாம்பாடி கிராமத்தில் புதிதாக கட்டப்படும் அரசு பள்ளி கட்டிடத்தை பார்வையிட்டார்.
அதனையடுத்து முக்குறும்பை அரசு பள்ளி பழைய கட்டிடத்தை பார்வையிட்டார். கஸ்தம்பாடியில் சிமெண்ட் சாலையை பார்வையிட்டு பால்வார்த்து வென்றான் அங்கன்வாடி மையத்தையும் ஆய்வு செய்தார்.
போளூர் பேரூராட்சிக்கு உட்பட்ட திடக்கழிவு மேலாண்மை இடத்தையும், மின்சார தகனம் மேடையும், புதிதாக கட்டப்படும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தையும் பார்வையிட்டார்.
இதில ஆரணி கோட்டாட்சியர் தனலட்சுமி போளூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தி பெருமாள், வட்டார வளர்ச்சி அலுவலர் பி.ஏ வேலு, மேலாளர் அருள் ஆகியோர் உடன் இருந்தனர்.