உள்ளூர் செய்திகள்

போதைப்பொருள் தடுப்பு குறித்து வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு

Published On 2022-09-17 14:49 IST   |   Update On 2022-09-17 14:49:00 IST
  • ஆரணி போலீஸ் நிலையத்தில் நடந்தது
  • தடையை மீறி செயல்பட்டால் கடைகளுக்கு சீல்- எச்சரிக்கை

ஆரணி:

ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் வியாபாரிகளுடன் போதை பொருள் விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் அனைவரையும் வரவேற்றார் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக டி.எஸ்.பி ரவிசந்திரன் பங்கேற்றார்.

மேலும் டி.எஸ்.பி பேசியாதாவது:-

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா புகையிலை போதை பொருட்களை விற்பனை செய்யக் கூடாது தடையை மீறி விற்பனை செய்தால் கடை உரிமையாளர்கள் மீது வழக்கு பதியப்பட்டு கடைகளுக்கு சீல் வைக்கப்படும் வங்கிக்கணக்குகள் முடக்கப்படும் இவ்வாறு அவர் பேசினார்.

இதில் ஆரணி வியாபார சேர்ந்தவர்கள் திரளாக பங்கேற்றனர்.

Tags:    

Similar News