உள்ளூர் செய்திகள்

வளர்ச்சி திட்ட பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு

Published On 2023-01-12 09:54 GMT   |   Update On 2023-01-12 09:54 GMT
  • தொடர்ந்து 4 கிராமங்களுக்கு ஆய்வுக்கு சென்றார்
  • பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

திருவண்ணாமலை:

கலசப்பாக்கம் அடுத்த துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கூடுதல் கலெக்டர் வீர்பிரதாப்சிங் ஆய்வு செய்தார்.

அப்போது துர்க்கைநம்மியந்தல், இனாம்காரியந்தல், நார்த்தாம்பூண்டி ஊதிரம்பூண்டி, தேவனாம்பட்டு, வடபுழுதியூர் ஆகிய கிராமங்களில் உள்ள விவசாயிகள் பயன்படுத்துவதற்காக போடப்பட்டிருந்த நீர்க்கலத்தை ஆய்வு செய்தார்.

இதன் பின்னர் இரவு ஒன்றிய அலுவலகத்தில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார் தொடர்ந்து ரூ.3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஒன்றிய அலுவலக வளாகத்தை பார்வையிட்டார். அதனை தொடர்ந்து 4 கிராமங்களுக்கு ஆய்வுக்கு சென்றார்.

பின்னர்அதிகாரிகளிடம் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கூறினார்.

Tags:    

Similar News