உள்ளூர் செய்திகள்

போதை ஒழிப்பு சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம்

Published On 2022-08-13 14:56 IST   |   Update On 2022-08-13 14:56:00 IST
  • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
  • தேசிய மாணவர் படை மாணவர்கள் கலந்து கொண்டனர்

செய்யாறு:

செய்யாறு திருவத்திபுரம் நகராட்சி சார்பில் இன்று போதை ஒழிப்பு சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நகர மன்ற தலைவர் மோகனவேல் தலைமை வகித்தார். ஆணையாளர் கே ரகுராமன் முன்னிலை வகித்தார்.

செய்யாறு எம் எல் ஏ ஜோதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சைக்கிள் பேரணியை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர் வழக்கறிஞர் கே விஸ்வநாதன், ஒன்றிய செயலாளர் திரு திராவிட முருகன், நகர மன்ற உறுப்பினர்கள் கோவேந்தன், கார்த்திகேயன், விஜயபாஸ்கர், கங்காதரன், தலைமை ஆசிரியர் ஜெயகாந்தன், ஆசிரியர்கள் சரவணன், சக்தி நாராயணன், வரதன் மற்றும் இளம் செஞ்சிலுவை சங்க மாணவர்கள், தேசிய மாணவர் படை மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News