உள்ளூர் செய்திகள்
- போலீசார் விசாரணை
- மது பாட்டில்கள் பறிமுதல்
வந்தவாசி :
வந்தவாசி கோட்டை காலனி பகுதியைச் சேர்ந்தவர் முகமது பாஷா (வயது 44).
இவர் கோட்டை காலனி பகுதியில் உள்ள அய்யனாரப்பன் கோவில் அருகே முட்புதரில் மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதை அடுத்து வந்தவாசி தெற்கு நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மது விற்பனை செய்த முகமது பாஷாவை கைது செய்து அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் வந்தவாசி அடுத்த மேல்பாதி கிராம ஏரிக்கரை அருகே மது விற்பனை செய்வதாக வடவணக்கம்பாடி போலீ சாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மது விற்ற ஜமாலுதீன் (54) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.