உள்ளூர் செய்திகள்

 உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

பல்லடம் அருகே கிராமமக்கள் உண்ணாவிரதம்

Published On 2023-04-09 06:00 GMT   |   Update On 2023-04-09 06:00 GMT
  • 23 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
  • இரும்பு உருக்காலை கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டி கிராமத்தில், தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்காலை கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் உருக்காலை உரிமம் முடிவடைந்த நிலையில் அதனை புதுப்பிக்க கூடாது என வலியுறுத்தி அனுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த17ந் தேதி முதல் கடந்த 23 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே காத்திருப்பு போராட்ட பந்தலில், அப்பகுதி மக்கள் 21 பேர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த உண்ணாவிரதத்தை அனுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமார், வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதற்கிடையே நேற்று மாலை உண்ணாவிரத பந்தலுக்கு வந்த தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வாழ்த்தினார்.

Tags:    

Similar News