தாராபுரத்தில் ஓடும் பஸ்ஸில் ஆடிட்டரிடம் ரூ.3 லட்சம் பணம் திருட்டு
- மனைவி கள்ளிமந்தயம் பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் பணியாளராக வேலை பார்த்து வருகிறார்
- தனது பெற்றோரை பார்க்க வந்துள்ளார்
தாராபுரம் :
தாராபுரம் அடுத்த கள்ளிமந்தயம் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (32) இவர் ஈரோட்டில் உள்ள தனியார் வங்கியில் ஆடிட்டராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி கள்ளிமந்தயம் பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 4 வயதில் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று சென்னிமலையில் உள்ள தனது பெற்றோரை பார்க்க வந்துள்ளார். அவர்கள் கொடுத்த ரூ. 3 லட்சத்தை வாங்கி கொண்டு ஒட்டன்சத்திரம் தாராபுரம் புறவழிச்சாலையில் பஸ்சில் பயணம் சென்று கொண்டிரு ந்தார். அப்போது பஸ் தனியார் ஓட்டல் முன்பு நின்றது. அப்போது மஞ்சப்பையில் வைத்து இருந்த ரூ.3 லட்சம் பணத்தை அங்கிருந்த ஒருவர் திருடி சென்றார். சிறிது நேரம் கழித்து பணத்தைப் பார்த்த போது பஸ்சின் மேல் புறத்தில் வைத்திருந்த பணத்தைக் காணவில்லை என தெரிகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஆடிட்டர் தாராபுரம் போலீசருக்கு தகவல் தெரிவித்தார். இதன் பேரில் தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.