உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்ட கொள்ளையன்.

கடைக்குள் புகுந்து திருட முயன்ற கொள்ளையனுக்கு தர்மஅடி

Published On 2023-08-11 15:38 IST   |   Update On 2023-08-11 15:38:00 IST
  • பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த பணம் மற்றும் பொருட்களை திருட முயன்றதாக கூறப்படுகிறது.
  • சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவனை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

பல்லடம்:

பல்லடம் பனப்பாளையம் பகுதியில், பழைய இரும்பு கடை வைத்து நடத்தி வருபவர் ராமராஜ் (வயது 43). நேற்று உறவினர் வீட்டு விசேஷத்திற்காக தனது மனைவி மகாலட்சுமியுடன் கடையை பூட்டி விட்டு சென்றார். நேற்று மாலை பூட்டிய இரும்பு கடைக்குள் இருந்து சத்தம் கேட்டதால், அருகே உள்ள கடைக்காரர் ஒருவர் சென்று பார்த்தபோது மர்ம ஆசாமிகள் 2 பேர் கடைக்குள் இருந்தது தெரிய வந்தது.மேலும் பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த பணம் மற்றும் பொருட்களை திருட முயன்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அக்கம்-பக்கம் உள்ளவர்களை அவர் உதவிக்கு அழைத்தார். இதற்குள் ஒருவன் ஓடிவிட மற்றொருவன் பொதுமக்களிடம் மாட்டிக் கொண்டான். அவனைப் பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள், இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவனை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அவன் திண்டுக்கல்லைச் சேர்ந்த பிரகாஷ் என்பது தெரியவந்துள்ளது.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News