உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

வரிகளை இணையதள செயலி மூலம் செலுத்தலாம் - தாராபுரம் நகராட்சி அறிவிப்பு

Published On 2022-10-28 12:27 IST   |   Update On 2022-10-28 12:27:00 IST
  • செயலியை கைப்பேசி ஆப்பின் பதிவிறக்கம் செய்து, அதன் மூலமாக வரியினங்களை செலுத்தி பயனடையலாம்.
  • தாராபுரம் நகராட்சி ஆணையா் வே.ராமா் அறிவிப்பு.

தாராபுரம் :

தாராபுரம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி உள்ளிட்ட வரியினங்களை இணையதள செயலி மூலம் செலுத்தலாம் என நகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.இது குறித்து தாராபுரம் நகராட்சி ஆணையா் வே.ராமா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தாராபுரம் நகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய சொத்து வரி, காலிமனை வரி, குடிநீா்க் கட்டணம் உள்ளிட்ட வரியினங்களை இணையதள செயலி மூலம் செலுத்தலாம். இதற்காக தயாரிக்கப்பட்டசெயலியை கைப்பேசி ஆப்பின் பதிவிறக்கம் செய்து, அதன் மூலமாக தாராபுரம் நகராட்சியைத் தோ்வு செய்து, மேற்கண்ட வரியினங்களை செலுத்தி பயனடையலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News