உள்ளூர் செய்திகள்
சுதந்திர தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகள் நாளை மூடல்
- மதுபானங்கள் விற்பனை செய்வதை நிறுத்தம் செய்ய வேண்டும்.
- மது விற்பனை செய்தால் நடவடிக்கை மேறகொள்ளப்படும்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் நாளை (திங்கட்கிழமை) சுதந்திர தினத்தை முன்னிட்டு, டாஸ்மாக்கின் கீழ் இயங்கி வரும் மதுபான கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த மதுபான கூடங்கள், மனமகிழ் மன்றங்கள் மற்றும் உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற மதுபான கூடங்கள் ஆகியவை சுதந்திர தினத்தன்று மூடப்பட்டு மதுபானங்கள் விற்பனை செய்வதை நிறுத்தம் செய்ய வேண்டும்.
தவறும்பட்சத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேறகொள்ளப்படும் என்று கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.