உள்ளூர் செய்திகள்
கோடை மழையால் நீங்கிய பசுந்தீவன பற்றாக்குறை
- தை மாதத்திற்கு பின் போதிய மழை இல்லாததால் மேய்ச்சல் நிலங்கள் கருகின.
- கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையும், குறித்த நேரத்தில் பெய்யாததால் தீவனப்பயிர் வளர்ச்சி பாதிக்கப்பட்டது.
உடுமலை :
தை மாதத்திற்கு பின் போதிய மழை இல்லாததால் மேய்ச்சல் நிலங்கள் கருகின. இதனால் உடுமலை கிராமங்களில் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் சிரமத்தை எதிர்கொண்டனர்.கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையும், குறித்த நேரத்தில் பெய்யாததால் தீவனப் பயிர் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. தீவனத் தட்டுப்பாடு ஏற்பட்டது.விவசாயிகள் கால்நடைகளுக்கான தீவனத்தேவையை சமாளிக்க வைக்கோல், கழிவுபஞ்சு மற்றும் அடர் தீவனங்களை வாங்கி நிலைமையை சமாளித்தனர். தற்போது கோடை மழை பெய்து வருகிறது.
இதனால் இயற்கையாக வளரும் கோரை, கொழுக்கட்டை, அருகு போன்ற புல் வகைகள் செழித்து வளரத்துவங்கி உள்ளன. பசுந்தீவன பற்றாக்குறை நீங்கி பால் உற்பத்தி அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.