உள்ளூர் செய்திகள்

தபால் அலுவலகத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள தேசிய கொடிகள்.

தபால் அலுவலகங்களில் தேசிய கொடிகள் விற்பனை

Published On 2022-08-07 10:44 GMT   |   Update On 2022-08-07 10:44 GMT
  • 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடி ஏற்ற பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
  • www.epostoffice.gov.in எனும் ஆன்லைன் முகவரியிலும் பெற்று கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 திருப்பூர் :

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வருகிற 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடி ஏற்ற பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

மூவர்ண கொடி என்ற பிரசாரம் அடிப்படையில் நாட்டில் உள்ள 1.6 லட்சம் தபால் நிலையங்களில் மக்களுக்கு எளிதாக கிடைக்கும் வகையில் தேசியக் கொடி விற்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் இந்திய தேசியக்கொடிகள், காகித பொருட்கள விற்பனை செய்யும் நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் இந்திய தேசிய கொடிகள், மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 8 சிறு குறு நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் தேசிய கொடிகள் ஆகியவை பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படும். குறிப்பாக தபால் நிலையங்கள் மற்றும் www.epostoffice.gov.in எனும் ஆன்லைன் முகவரியிலும் பெற்று கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி 20 இன்ச் அகலம் 30 இன்ச் நீளம் உள்ள தேசியக்கொடி 25 ரூபாய் மட்டுமே.

ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடியை ஏற்ற சொல்வதால் மக்களிடையே தேசபக்தி உணர்வை ஏற்படுத்தவும், அதற்காக உழைத்தவர்களை நினைவுபடுத்துவதே இதன் திட்டமாகும். ஒவ்வொரு தபால் அலுவலகம், தலைமை அலுவலகங்கள், துணை அலுவலகங்கள், மற்றும் கிளை அலுவலகங்களில் 15 ந் தேதி தேசிய கொடி ஏற்றப்படும் என கோட்ட தபால் துறை அலுவலர்கள் தெரிவித்தனர். அதன்படி திருப்பூர் ரெயில் நிலையத்தில் உள்ள ஆர்.எம்.எஸ். தபால் நிலையத்தில் தேசியக்கொடி விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News