உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

காங்கயம் அரிசி ஆலை உரிமையாளர் வீட்டில் கொள்ளை - கொள்ளையர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

Published On 2022-08-15 05:48 GMT   |   Update On 2022-08-15 05:48 GMT
  • கிருஷ்ணமூா்த்தி தனது குடும்பத்துடன் திருப்பூரில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்றுள்ளாா்.
  • வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டதைக் கண்டு அதிா்ச்சியடைந்துள்ளாா்.

காங்கயம்

காங்கயம், அய்யாசாமி நகா் பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி (வயது 40), அரிசி ஆலை நடத்தி வருகிறாா். இந்நிலையில், கிருஷ்ணமூா்த்தி தனது குடும்பத்துடன் திருப்பூரில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்றுள்ளாா். மதியம் வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டதைக் கண்டு அதிா்ச்சியடைந்துள்ளாா்.உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 20 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரம் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது.

இது குறித்து காங்கயம் காவல் நிலையத்தில் கிருஷ்ணமூா்த்தி புகாா் அளித்தாா்.வழக்குப் பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி கொள்ளையர்கள் யாரென்று விசாரணை நடத்தி வருகின்றனா்.

Tags:    

Similar News