உள்ளூர் செய்திகள்

பி.என்.ரோட்டில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்ற காட்சி.

திருப்பூர் பிச்சம்பாளையம் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Published On 2022-09-10 11:20 GMT   |   Update On 2022-09-10 11:20 GMT
  • போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் வகையில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.
  • சனிக்கிழமைதோறும் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர்.

திருப்பூர் :

திருப்பூர் மாநகரில் போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் வகையில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக சனிக்கிழமைதோறும் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர்.

அதன்படி இன்று திருப்பூர் பெருமாநல்லூர் ரோடு ,பிச்சம்பாளையம்,பி.என்.ரோட்டில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மேற்பார்வையில் பணியாளர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் சாலையோரம் கடைகள் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News