உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

உடுமலையில் தூய்மை பணியாளர்களுக்கு பரிசு

Published On 2022-08-30 06:04 GMT   |   Update On 2022-08-30 06:04 GMT
  • ஆக்கிரமிப்பு அகற்றுதல், பிளக்ஸ் பேனர்கள் அகற்றம்.
  • தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.

உடுமலை :

தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம், ஒவ்வொரு மாதத்தின் 2 மற்றும் 4வது சனிக்கிழமைகளில் திடக்கழிவு மேலாண்மையில், குப்பை தரம் பிரித்தல், 'என் குப்பை என் பொறுப்பு' என மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பள்ளி மாணவர்கள் வழியாக விழிப்புணர்வு, கூட்டு துப்புரவுப்பணி மேற்கொள்ளுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

மேலும் நகரங்களிலுள்ள குடியிருப்போர் நலச்சங்கங்கள், சுய உதவி குழுக்களுக்கு பயிற்சி அளித்தல், மரக்கன்று நடுதல், ஆக்கிரமிப்பு அகற்றுதல், பிளக்ஸ் பேனர்கள் அகற்றம், தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.அதன் அடிப்படையில், தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தில் உடுமலை நகராட்சியுடன் இணைந்து செயல்பட்ட தன்னார்வலர்கள், சங்கங்கள் மற்றும் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நகராட்சி தலைவர் மத்தீன், துணைத்தலைவர் கலைராஜன், கமிஷனர் சத்யநாதன், நகர் நல அலுவலர் டாக்டர் கவுரி சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.தொடர்ந்து, தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. நகர ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் கவுதம் தலைமையில், மருத்துவ குழுவினர் பரிசோதனை மற்றும் சிகிச்சை மேற்கொண்டனர்.

Tags:    

Similar News