உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்.
- துணை மின்நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
- காலை 9.00 மணி முதல் 4.00 மணி வரை மின்வினியோம் தடை செய்யப்படுகிறது.
திருப்பூர், செப்.19-
தமிழ்நாடு மின்சார வாரியம் திருப்பூர் மின்வாரிய செயற்பொறியாளர் கே.ஆர்.சபரிராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- திருப்பூர் வஞ்சிபாளையம் துணை மின்நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (புதன்கிழமை) நடக்கிறது.
எனவே நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை வஞ்சிபாளையம், கணியாம்பூண்டி, வெங்கமேடு, வலையபாளையம், சாமந்தன்கோட்டை, அனந்தாபுரம், செம்மாண்டாம்பாளையம், செம்மாண்டாம்பாளையம் புதூர், கோதபாளையம், முருகம்பாளையம், காவிளிபாளையம், சோளிபாளையம், 15வேலம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.