உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

பா.ஜ.க.வினர் மீது தாக்குதல் கலெக்டர், எஸ்.பி.யிடம் மனு

Published On 2023-06-18 09:02 GMT   |   Update On 2023-06-18 09:02 GMT
  • தவறு செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ததற்கு பா.ஜ.க. சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
  • பா.ஜ.க. தொண்டர்கள் சுமூகமாக வாழ மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

திருப்பூர் :

பா.ஜனதா கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமையில் கட்சியினர் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், அவினாசிபாளையம் பகுதியில் செல்வக்குமார் என்பவரை கொலை செய்ய முயற்சி செய்த சம்பவத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்து தவறு செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ததற்கு பா.ஜ.க. சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். பா.ஜ.க. சுற்றுச்சூழல் பிரிவு மாவட்ட தலைவர் செல்வக்குமார், செகமலையப்பன், சம்பத்குமார் ஆகியோரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகாரை பதிவு செய்ததற்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம். பா.ஜ.க. தொண்டர்கள் சுமூகமாக வாழ மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இதுபோல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதனிடம் மனு கொடுத்து முறையிட்டனர்.

Tags:    

Similar News