உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

இலவச வீட்டுமனை பட்டாக்களுக்கான நிலத்தை அளவீடு செய்து தரக்கோரி மனு

Published On 2023-03-03 07:09 GMT   |   Update On 2023-03-03 07:09 GMT
  • 32 நபா்களுக்கு அரசு சாா்பில் இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் கடந்த 2006ம் ஆண்டு வழங்கப்பட்டன.
  • 16 ஆண்டுகளாக வருவாய்த் துறையினா் நிலத்தை ஒப்படைக்கவில்லை.

வெள்ளகோவில் :

இலவச வீட்டு மனைப் பட்டாக்களுக்கான நிலத்தை அளவீடு செய்து தரக்கோரி வெள்ளக்கோவில் உப்புப்பாளையம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.இது தொடா்பாக திருப்பூா் மாவட்ட கலெக்டர் வினீத் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் அனுப்பியுள்ள மனு விவரம் வருமாறு:-

வெள்ளக்கோவில் வருவாய் கிராமம், கிழக்கு உப்புப்பாளையத்தில் 32 நபா்களுக்கு அரசு சாா்பில் இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் கடந்த 2006ம் ஆண்டு வழங்கப்பட்டன. இவற்றில் வெளியூா் நபா்கள் என 20 பேரின் பட்டாக்கள் 2007ல் தனி வட்டாட்சியரால் ரத்து செய்யப்பட்டன. இதனை எதிா்த்து தகுந்த ஆதாரங்களுடன் 8 நபா்கள் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து கிடைத்த தீா்ப்பில், தனி வட்டாட்சியா் உத்தரவு ரத்து செய்யப்பட்டது. இருந்தாலும் 16 ஆண்டுகளாக வருவாய்த் துறையினா் நிலத்தை ஒப்படைக்கவில்லை. மீண்டும் உயா்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டு, இலவசப் பட்டாக்கள் படி, நிலத்தை அளந்து நான்கு புறமும் அத்துக்கட்டித் தர வேண்டுமென தீா்ப்பு வழங்கப்பட்டது. எனவே உயா்நீதிமன்ற ஆணைப்படி 8 நபா்களுக்கு நிலத்தை அளவீடு செய்து தர வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News