உள்ளூர் செய்திகள்

பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

பல்லடம் அருகே விபத்துகளை தடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2023-04-06 11:48 GMT   |   Update On 2023-04-06 11:48 GMT
  • சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது.
  • அதிகாரிகள், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள ஆலூத்து பாளையம் பிரிவு பகுதியில், பல்லடம்- தாராபுரம் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சாலை விரிவாக்க பணியால் அடிக்கடி அந்த பகுதியில் விபத்துக்கள் ஏற்படுவதா கவும், விபத்து க்களை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி நேற்று இரவு அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து அங்கு சென்ற பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா, இன்ஸ்பெக்டர் மணிகண்டன், மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரி கள் பொதுமக்க ளுடன் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News