உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு அபராதம்

Published On 2023-06-10 11:56 GMT   |   Update On 2023-06-10 11:56 GMT
  • 10 கடைக்காரர்களுக்கு தலா ரூ .500 அபராதம் விதிக்கப்பட்டது.
  • மளிகை கடைகள், பெட்டிக்கடைகள், பேக்கரிகள் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டனர் .

அவினாசி

உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நேற்றுஅவினாசி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மனோகரன் தலைமையில் ஆய்வாளர் ரமேஷ் உள்ளிட்ட சுகாதாரத் துறையினர் அவினாசியை அடுத்து கருவலூரில்உள்ள மளிகை கடைகள், பெட்டிக்கடைகள், பேக்கரிகள் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டனர் .

அப்போது அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்ததாக 10 கடைக்காரர்களுக்கு தலா ரூ .500 அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:    

Similar News