உள்ளூர் செய்திகள்
வெள்ளகோவில் கோவில்களில் மகாளய அமாவாசை வழிபாடு
- மஞ்சள், சந்தனம்,மலர், பன்னீர், பால், தயிர், கனி ஆகிய சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் பகுதியில் மகாளய அமாவாசை யை முன்னிட்டு வீரக்குமாரசாமி கோவில், செல்லாண்டியம்மன் கோவில், மாகாளியம்மன் கோவில், புற்றுக்கண் ஆனந்த விநாயகர் கோவிலில் தேன், பஞ்சாமிர்தம், விபூதி, மஞ்சள், சந்தனம்,மலர், பன்னீர், பால், தயிர், கனி ஆகிய சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.