உள்ளூர் செய்திகள்

திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ். 

மகளிர் மேம்பாட்டு நிறுவன திட்டங்களை அறிய வாழ்வாதார உதவி அழைப்பு எண்ணை தொடர்பு கொள்ளலாம்- கலெக்டர் அறிவிப்பு

Published On 2023-08-11 15:11 IST   |   Update On 2023-08-11 15:11:00 IST
  • இந்த அழைப்பு மையம் அனைத்து வேலைநாட்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை செயல்படும்.
  • தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் மகளிர் வாழ்வாதாரம் மற்றும் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

திருப்பூர்:

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் மகளிர் வாழ்வாதாரம் மற்றும் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், தீன் தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் போன்ற அரசு திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எழும் கேள்விகள், சந்தேகங்கள் மற்றும் தகவல்களை தெரிந்து கொள்ள வசதியாக 155330 என்ற தொலைபேசி எண் சேவை மையம் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பு மையம் அனைத்து வேலைநாட்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை செயல்படும்.

தமிழகத்தின் எந்த பகுதியில் இருந்தும் தொலைபேசிஅல்லது செல்போன் மூலமாக இந்த அழைப்பு எண்ணை தொடர்புகொண்டு திட்ட விவரங்களை எந்தவித கட்டணமும் இன்றி பெற முடியும். குறிப்பாக கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் சுயஉதவிக்குழுக்கள் அமைத்தல், வங்கி கடன் உதவி பெறுதல், சுழல்நிதி பெறுதல், பயிற்சிகள், கணக்கு பராமரிப்பு, வாழ்வாதாரம் தொடர்பான திட்ட விவரங்கள், சுயஉதவிக்குழுக்கள் மூலம் குழுவாக தொழில் தொடங்குதல், உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துதல், வேளாண் கருவிகள் வாடகைக்கு விடுதல், பெறுதல் ஆகியவை குறித்தும் விளக்கம் பெறலாம்.

18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் சுயதொழில் மேற்கொள்ள ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் மூலமாக வழங்கப்படும் பயிற்சிகள் குறித்தும் அறிந்துகொள்ளலாம். பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு பெற விரும்பும் கிராமப்புற இளைஞர்கள், தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குறுகிய கால பயிற்சிகள், பயிற்சி மையங்கள், தகுதிகள், பயிற்சியின்போது வழங்கப்படும் வசதிகள் குறித்தும் தகவல் பெறலாம்.

இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News