உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

உடுமலையில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது

Published On 2022-11-21 09:57 IST   |   Update On 2022-11-21 09:57:00 IST
  • தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை ஒருவர் விற்பனை செய்வதாக குமரலிங்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
  • லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் நாகராஜை கைது செய்தனர்.

உடுமலை

உடுமலை அருகே உள்ள குமரலிங்கம் பஸ் நிலையம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை ஒருவர் விற்பனை செய்வதாக குமரலிங்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று லாட்டரி விற்பனை செய்தவரை பிடித்தனர். விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ் ( வயது 37) என தெரியவந்தது. லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் நாகராஜை கைது செய்தனர்.

Tags:    

Similar News