உள்ளூர் செய்திகள்
அ.தி.மு.க.வின் 52-வது ஆண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றபோது எடுத்தபடம்.

திருப்பூரில் அ.தி.மு.க. 52-வது ஆண்டு விழா பொதுக்கூட்டம்: பொள்ளாச்சி ஜெயராமன் - எம்.எல்.ஏ. பங்கேற்பு

Published On 2023-10-19 08:27 GMT   |   Update On 2023-10-19 10:31 GMT
  • முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குணசேகரன், பகுதி செயலாளர்கள் கண்ணப்பன், கே.பி.ஜி.மகேஷ்ராம், ஹரிகரசுதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  • இயக்குனர் மனோஜ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சிவசுப்பிரமணி, பழனிசாமி ஆகியோர் பேசினார்கள்.

திருப்பூர்:

அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்டத்தின் தென்னம்பாளையம் பகுதி 56-வது வட்டம் சார்பில் கட்சியின் 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் செரங்காட்டில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாணவர் அணி துணை செயலாளர் ஹரிபிரசாந்த் தலைமை தாங்கினார். தென்னம்பாளையம் பகுதி செயலாளரும், மாமன்ற எதிர்க்கட்சி தலைவருமான அன்பகம் திருப்பதி வரவேற்று பேசினார். மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குணசேகரன், பகுதி செயலாளர்கள் கண்ணப்பன், கே.பி.ஜி.மகேஷ்ராம், ஹரிகரசுதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. சிறப்புரையாற்றி பேசும்போது, 'அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமையும் கூட்டணி அடுத்து வரும் தேர்தல்களில் வெற்றி பெறும் வகையில் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்' என்றார். தலைமை கழக பேச்சாளர் திரைப்பட இயக்குனர் மனோஜ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சிவசுப்பிரமணி, பழனிசாமி ஆகியோர் பேசினார்கள்.

கூட்டத்தில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை தலைவர் அட்லஸ் லோகநாதன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் மார்க்கெட் சக்திவேல் மற்றும் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News