உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

காம்பவுண்ட் சுவரை இடித்து அகற்றிய 8 பேர் மீது வழக்கு

Published On 2023-10-17 17:20 IST   |   Update On 2023-10-17 17:20:00 IST
  • சம்பவத்தன்று கிட்டுச்சாமி உறவினர்கள் 8 பேர் காம்பவுண்ட் சுவரை இடித்து அப்புறப்படுத்தினர்.
  • குன்னத்தூர் போலீசார் கிட்டு சாமி உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குன்னத்தூர்:

குன்னத்தூர் அருகே வலையபாளையத்தில் வசிப்பவர் வடிவேலு . இவருக்கும் அருகில் வசிக்கும் கிட்டுச்சாமி என்பவருக்கும் காம்பவுண்ட் சுவர் சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று கிட்டுச்சாமி உறவினர்கள் 8 பேர் காம்பவுண்ட் சுவரை இடித்து அப்புறப்படுத்தினர். இது குறித்த புகாரின் பேரில் குன்னத்தூர் போலீசார் கிட்டு சாமி உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Tags:    

Similar News