உள்ளூர் செய்திகள்
விழிப்புணர்வு பேரணி நடைபெற்ற காட்சி.
தாராபுரத்தில் விழிப்புணர்வு பேரணி
- இலவசம் மருத்துவ முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேரணி நடைபெற்றது.
- பயிற்றுநர்கள்,சிறப்பு ஆசிரியர்கள், இயன்முறை மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி ஒன்றியம் சார்பாக 0-18 வயது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நடைபெற இருக்கும் இலவசம் மருத்துவ முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேரணி நடைபெற்றது. இப்பேரணி என்.ஜி.ஜி.ஓ காலனியில் அமைந்துள்ள அரசு பொண்ணு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் இருந்து நடைபெற்றது இந்த பேரணியில் மாற்றுத்திறன் மாணவ மாணவர்களுக்கு உண்டான விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் பள்ளி தலைமை ஆசிரியர், மேற்பார்வையாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள்,ஆசிரிய- ஆசிரியைகள்,பயிற்றுநர்கள்,சிறப்பு ஆசிரியர்கள், இயன்முறை மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.