உள்ளூர் செய்திகள்
விபத்தில் சிக்கிய வேன். 

வெள்ளகோவில் அருகே விபத்தில் சிக்கிய வேன்

Published On 2023-05-07 08:10 GMT   |   Update On 2023-05-07 08:10 GMT
  • வெள்ளமடை அருகே வரும்போது அந்த வழியாக வந்த ஒரு கார் வேனை முந்தி செல்லும் போது உரசி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
  • வேனை ஓட்டிச் சென்ற நவீன் லேசான சிராய்ப்பு காயத்துடன் உயிர் தப்பினார். வேன் முற்றிலும் சேதம் அடைந்து விட்டது.

வெள்ளகோவில்:

கரூர் மாவட்டம் தென்னிலை அருகே ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் பழுதாகி நின்றுள்ளது. அந்த வாகனத்திற்கு டூல்ஸ் எடுத்துக்கொண்டு வெள்ளகோவில் ஓலப்பாளையத்தில் இருந்து நவீன் (வயது 23) என்பவர் வேனில் சென்றார்.

வெள்ளமடை அருகே வரும்போது அந்த வழியாக வந்த ஒரு கார் வேனை முந்தி செல்லும் போது உரசி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதனால் வேன் சாலையில் கவிழ்ந்தது. வேனை ஓட்டிச் சென்ற நவீன் லேசான சிராய்ப்பு காயத்துடன் உயிர் தப்பினார். வேன் முற்றிலும் சேதம் அடைந்து விட்டது.

Tags:    

Similar News