உள்ளூர் செய்திகள்

நாகராஜ். 

வைகோ கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும் - ம.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் நாகராஜ் அறிக்கை

Published On 2022-08-07 09:14 GMT   |   Update On 2022-08-07 09:14 GMT
  • ம.தி.மு.க. புதிய அலுவலகம் திறப்பு விழா நாளை நடைபெறுகிறது.
  • வைகோ ‘இளமுகில்’ வளாகம் திறப்பு விழாவில் பங்கேற்கிறார்.

திருப்பூர் :

ம.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.நாகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாநகர் மாவட்ட ம.தி.மு.க. புதிய அலுவலகம் திருப்பூர் அவினாசி ரோடு, காந்திநகர் ஈ.பி.காலனியில் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.

விழாவில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு புதிய அலுவலக கட்டிடத்தை திறந்துவைத்து பேசுகிறார். இதையடுத்து காலை 11 மணிக்கு தாராபுரம் ரோடு வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில மாநாட்டில் கலந்துகொண்டு பேசுகிறார். அன்று மாலை 5 மணிக்கு திருப்பூர் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர், வழக்கறிஞர் இ.என்.கந்தசாமி, தமயந்தி கந்தசாமி ஆகியோரின் புதிய அலுவலக கட்டிடம் 'இளமுகில்' வளாகம் திறப்பு விழாவில் பங்கேற்கிறார். பின்னர் மாலை 6 மணி அளவில் பல்லடம் ரோட்டில் உள்ள எஸ்.ஏ.காதர் சலிமா திருமண மண்டபத்தில் நடைபெறும் 'இளமுகில்' வளாகம் திறப்பு விழா வாழ்த்தரங்க நிகழ்ச்சியில் வைகோ கலந்து ெகாள்கிறார். இதைதொடர்ந்து திருப்பூர் மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் நடைபெறும் செயல் வீரர்கள் கூட்டத்தில், பூர்த்தி செய்யப்பட்ட புதிய உறுப்பினர் படிவங்களை பெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு,சிறப்புரையாற்றுகிறார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொள்ளும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News