உள்ளூர் செய்திகள்

பாதாள சாக்கடை திட்டப்பணிகளை மேயர் தினேஷ்குமார் ஆய்வு செய்த போது எடுத்த படம்.

பாதாள சாக்கடை திட்டப்பணிகளை மேயர் திடீர் ஆய்வு

Published On 2023-05-16 10:01 GMT   |   Update On 2023-05-16 10:01 GMT
  • பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
  • தோண்டப்பட்ட குழிகளை உடனடியாக நிரப்பி சாலை அமைக்கவும் ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

திருப்பூர் :

திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடந்து வருகிறது. ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் பணியை முடிக்காமல் கிடப்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்/ இதனை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்தநிலையில் திருப்பூர் மும்மூர்த்தி நகர் பாறை குழி மற்றும் வார்டு -32 தங்க மாரியம்மன் கோவில் 2-வது வீதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகள் குறித்து மேயர் தினேஷ்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்கவும். முடிக்கப்பட்ட இடங்களில் தோண்டப்பட்ட குழிகளை உடனடியாக நிரப்பி சாலை அமைக்கவும் ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி. கிரியப்பனவர், துணை மேயர் ஆர்.பாலசுப்ரமணியம் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.

Tags:    

Similar News